articles

img

தொடரும் சாதி ஆணவக் கொலைகள் சிறப்புத் தனிச் சட்டம் அவசியம்! -வழக்கறிஞர் மு.முனிச்செல்வம்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சமீபகாலமாக கொடூரமான முறையில் தாக்கப் பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வருவது தமிழ கத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. 

சட்டம் என்ன சொல்கின்றது?

1954-இலேயே ஸ்பெஷல் திருமணச் சட்டம் ஏற்கப்பட்டு, வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் சட்டம், ஜனவரி 1,1955-இலேயே நடைமுறைப்படுத்த தொடங்கி இருந்தாலும்; 1947இல் தொடங்கி, இந்து மதத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும், இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தை ஜவஹர்லால் நேருவால் 1955-ஆம் ஆண்டு தான் நிறைவேற்ற முடிந்தது. 1947-இல் அம்பேத்கர் இந்து மதச் சீர்திருத்த சட்டத்தின் முன் வரைவை வாசிக்கையில், பலரும் முகம் சுழித்தனர். அதில் ஒன்று தான் இந்து திருமணச் சட்டம்.

 1951-இல் பல எதிர்ப்புகளுடன் நாடாளுமன்ற விவாதத்திற்கு வர, சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அம்பேத்கர் தன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஒரு வழியாக 1955-இல் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

இந்து மத திருமணச் சட்டத்தில், எந்த சாதியை சேர்ந்தவரானாலும் (இந்து மதத்திற்குள்) அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டாலும் அதில் சாஸ்திரங்கள் இருத்தல் வேண்டும். ஆனால், சாஸ்தி ரம் சம்பிரதாயம் என்ற சாதிய அமைப்பின் அடிப்ப டையான எல்லாவற்றையும் உடைக்கவேண்டும் என்பது தான் பெரியாரின் லட்சியமாக இருந்தது. அதற்கான செயல் வடிவமே சுயமரியாதைத் திரும ணச் சட்டம். புரோகிதர் வேண்டாம், தாலி வேண்டாம்,  இருமனம் இணையும் திருமணத்தை அங்கீ கரிப்பதே சுயமரியாதை திருமணச் சட்டம்.

சுய மரியாதைத் திருமணச் சட்டம்

1967-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணச் சட்டம், அறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. அன்று நடந்த குறிப்பிடப்பட வேண்டிய நிகழ்வு, மசோதா சட்டமாகும் முன்பு அதன் வரைவு நகலை தந்தை பெரியாருக்கு அனுப்பி வைத்தார் அண்ணா. அதில், ‘மாலை மற்றும் தாலி’ என்று குறிப்பிட்டு தாலி என்பது கட்டாய மாக்கப்பட்டு இருந்ததை கவனித்த பெரியார், தாலியை கட்டாயமாக்க வேண்டாம், ‘மாலை அல்லது மாலையும் தாலியும்’ என்பதாக ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பின்னே, அதில் திருத்தம் மேற்கொண்டு அதனை சட்டமாக்கினார்.

முன்பெல்லாம், திருமணம் செய்து கொள்பவர்க ளுக்கே ஒருவரை ஒருவர் முன்பின் தெரியாமல், திருமணம் முடிந்தவுடன் அவர் எப்படிப்பட்டவரா னாலும் சேர்ந்து, வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது; மேலும் மனைவி இறந்து விட்டால் மட்டும் கணவனானவன் இன்னொரு திரு மணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது; ஆனால், புரோகிதர் தேவை இல்லாத சுயமரியாதைத் திருமணச் சட்டம், நன்கு அறி முகமான தனக்கு பிடித்த ஒருவரை மணம் முடிக்கவும், பிடிக்கவில்லை என்றால் மணமுறிவு செய்து கொள்ளவும், மறுமணம் செய்து கொள்ளவும் வழிவகை செய்வதாக, ஒரு சுயமரியாதை திரு மணத்தை நடத்தி வைக்கையில் பெரியார் குறிப்பிட்டார்.

சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட நாள் 28-11-1967.

சட்டப்படியே மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது

இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 7ஏ -படி சுயமரியாதை மற்றும் மதச்சார்பற்ற திருமணங்கள் பற்றிய சிறப்பு ஏற்பாடுகளைக் கையாள்கிறது. இது எந்தவொரு இரண்டு இந்துக்களுக்கும் இடை யிலான திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீ கரிக்கிறது. இது சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணம் அல்லது வேறு எந்த பெயரா லும் குறிப்பிடப்படலாம். இத்தகைய திருமணங்கள் உறவினர்கள், நண்பர்கள் அல்லது பிற நபர்கள் முன்னிலையில், ஒருவரையொருவர் கணவன் அல்லது மனைவி என்று அறிவிக்கும் வகையில், அவர்களுக்குப் புரியும் மொழியில் நடத்தப்படுகிறது. மேலும், இந்த திருமணத்தில் ஒவ்வொரு தரப்பினரும் மற்றவருக்கு மாலை அணிவிக்கிறார்கள் அல்லது மற்றவரின் விரலில் மோதிரத்தை அணிவிக்கிறார்கள் அல்லது தாலி அல்லது மங்கல நாணைக் கட்டுகிறார்கள். எனினும், இத்தகைய திருமணங்களும் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு இந்து திருமணச் சட்டம், 1955-ஐ திருத்தியதன் பின்னணியில், சுயமரியாதை அல்லது சுயமரியாதை திருமணங்களைச் சேர்க்க, கட்டாய பிராமண அர்ச்சகர்கள், ஹோமம், அக்னி சாட்சி மற்றும் சப்தபதி (ஏழு படிகள்) ஆகியவற்றின் தேவையைத் தவிர்த்து, திருமணங்களை  எளிமை யாக்கியது. இது தம்பதியினரின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் அல்லது வேறு நபர்கள் முன்னி லையில் திருமணங்களை அறிவிக்க அனுமதித்தது. சுருக்கமாகச் சொல்வதானால், திருமணச் சடங்கு களை செய்து வந்த பூசாரிகள் மற்றும் சடங்குகளின் தேவையை நீக்குவதற்கு இந்தத் திருத்தம் செய்யப்பட்டது. 

மேற்கண்ட சட்டத்தின் வழிகாட்டுதல்படிதான் சாதி மறுப்பு திருமணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் நடத்தி வைக்கிறார்கள். திருநெல்வேலியில் கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட  திருமணமும், இத்தகைய சட்டப்பூர்வமான ஒன்றே.

தமிழ்நாட்டில்  உண்மை நிலை என்ன?

பெண்ணை போகப்பொருளாகவும், சொத்து சார்ந்த பொருளாகவும், குடும்ப மானம், மரியாதை, கெளரவமாகவும் நாம் வாழும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பு பார்க்கின்றதே தவிர மனுசியாக, சக தோழியாகப் பார்ப்பதில்லை. இதன் விளைவாகவே, சாதி மாறி திருமணம் செய்தாலோ, ஒரே சாதியில் தன் பொருளாதாரத்திற்கு குறைவான ஆணை திருமணம் செய்தாலோ தன் சாதியின் பெருமை போய் விட்டது, தன் சொத்து எல்லாம் போய் விட்டது என்று நினைக்கின்றனர் சில பெற்றோர்கள். இதனை தன்னுடைய குறுகிய அரசியல் ஆதாயத் திற்காக கூர்தீட்ட முனைகின்றன சில சாதிய அமைப்புகள்.

தமிழ்நாடு ஒரு சாதி மறுப்பு மண் என்று சொல்கி றோம். ஆனால், இந்தத் தமிழ் மண்ணில் காதல் திரு மணங்கள் என்று கணக்கிட்டால் சுமார்  4 சதவீதம் தான் நடக்கின்றன. இதில் சாதிமறுப்பு திரு மணங்களை கணக்கிட்டால் 2 சதவீதம் கூட நடைபெறு வதில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் சாதி ஆணவப் படுகொலை களை தடுத்திட தனியான சிறப்புச்சட்டம் தேவை யில்லை; இருக்கின்ற சட்டங்களே போதும் என்று முதல்வர் அவர்கள் கூறினார்.

இந்த நிலையில்தான் சாதி ஆணவப் படுகொலை களும், தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. சமீபத்தில் அருப்புக்கோட்டை யில் பட்டியல் சாதிக்குள்ளாகவே திருமணம் செய்து கொண்டதற்காக அருந்ததியர் இளைஞனின் தலையை துண்டாக வெட்டி, ஆண் உறுப்பு உள்பட பல இடங்க ளில் காயங்களை ஏற்படுத்தி கொடூர படுகொலை செய்துள்ளனர். புராண காலத்தின் பூணூல் போட்ட முத்துப்பட்டன் முதல் உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன், முத்தையாவையும் தாண்டி சாதி ஆண வப் படுகொலைகள் கொடூரமான, குரூரமான வடி வங்களில் தொடர்கின்றன.

ஏற்கனவே உள்ள சட்டங்கள்- இவை எதையும் தடுக்கவில்லை.

காலத்தின் தேவை

எனவே தான், சாதிமறுப்பு தம்பதிகளை பாது காக்க, சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட தனியான சிறப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்ற குரல் வலுக்கிறது.

இச்சட்டம் காலத்தின் மிக அவசியத் தேவையாகும்.

பண்பாட்டுக் கூறுகளில் மிக முக்கியமானது அகமணமுறை.

இந்த அகமணமுறையில் தான் சாதிவெறி எனும் சனாதனம் ஆழமாக உயிர் வாழ்கிறது. இந்த சனாதன சடங்கு சம்பிரதாய அகமணமுறையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து சாதியற்ற சமூகமாக, சமத்துவப் பண்பாடாக தமிழ்ச் சமூகமும், இந்தியச் சமூகமும் மாற வேண்டும். அதற்கு சாதிமறுப்பு திருமணங்களும் மிக முக்கியமானவை ஆகும். 

கட்டுரையாளர் : தமுஎகச 
மாவட்ட துணைச் செயலாளர், செங்கல்பட்டு